உவந்து வழங்கப் பெறுவதான
ஒரு முத்தம்
மடிசாய்ந்து கிடக்கையில் நெற்றில் சொட்டும்
துளிக் கண்ணீர்
தோள் சாய்கையில் காதுமடல்களில் தடவிக் கொள்கிற
உச்சி வகிட்டு எண்ணெய்
உன் உள்ளங்கையை கன்னத்திற்கு கொடுத்து
உறங்கும் மதியத்தூக்கம் கை வியர்வை
நேயத்தின் திரவங்கள் கூடலை கடந்தும்
உயிர் வளர்ப்பன (1994 )
Wednesday, November 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அன்பின் இராகவன்
அருமை அருமை 1994 கவிதை - ( இளவயதுக் கவிதையா ) - நேய திரவங்கள் கூடலைக் கடந்தும் உயிர் வளர்ப்பன
நல்வாழ்த்துகள் இராகவன்
மிக்க நன்றி ஐயா சீனா...
இராகவன்,
வித்தியாசமான சிந்தனை. ரொம்ப நல்லா இருக்கு.
அருமை இராகவன்
//நேயத்தின் திரவங்கள் கூடலை கடந்தும்
உயிர் வளர்ப்பன //
மனித நேயம் கலந்த திரவங்கள் அருமை
நல்லா இருக்கு ராகவன்
போட்டிக்கு எழுதலாமே
இது நல்லா இருக்கே ராகவன்
நன்று நண்பரே...! அன்புடன் சக்தி..!
Post a Comment